Sunday, May 25, 2014

முஸ்லிம் செவிலியர்கள் சவூதி அரேபிய பணி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சவூதி அரேபியாவில் பணியாற்ற விருப்பம் மற்றும் தகுதிக் கொண்ட முஸ்லிம் செவிலியர்கள் விண்ணப்பிக்குமாறு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பி.எஸ்.சி தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட 30 வயதுக்குள்பட்ட முஸ்லிம் பெண் செலிவியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்குப் பணி அனுபவத்துக்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்பவர்களால் வழங்கப்படும்.
பணிக்கான நேர்முகத் தேர்வு மே 24 மற்றும் மே 25 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்திலும், மே 27 முதல் மே 29-ம் தேதி வரை கொச்சியிலும் நடைபெறுகிறது.
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியும் கொண்டவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, அனுபவச் சான்று ஆகியவற்றுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து, எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திருவிக தொழில்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் இயங்கும் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
அல்லது ovemclsn000gmail.com  என்ற ஈமெயில் முகவரிக்கு மேற்குறிப்பிட்ட சான்றுகளை அனுப்பி உடனடியாக விண்ணப்பிக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment