Friday, May 30, 2014

பாரத ஸ்டேட் வங்கியில் 5,092 பணியிடங்கள்பாரத ஸ்டேட் வங்கியில் 5,092 பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் நாடு முழுவது முள்ள 5 ஆயிரத்து 92 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்திருக்கிறது. இதற்கான தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 373 காலிப்பணியிடங்கள் இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நிரப்ப றறற.ளbi.உடி.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 26 ஆம் தேதியன்றே நிரப்புவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஜூன் மாதம் 14 ஆம் தேதி விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதியாகும்.

18 வயதை நிரம்பியவர்கள் விண்ணப் பத்தை நிரப்பலாம். பொதுவாக, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என் றிருந்த நிலையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, பட்டப்படிப்பில் கடைசி ஆண்டில் இருப்பவ ரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டிருக்கிறது. பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கான வயது வரம்பு 18 வயது முதல் 28 வயது வரை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 முதல் 31 வரை என்றும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 18 முதல் 33 வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுததப்பட்ட பிரிவினருக்கு ரூ. 450 என்று தேர்வுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment