Friday, September 30, 2016

புதிய கல்விக் கொள்கையால் கணினி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு!

புதிய கல்விக் கொள்கை அமலானால், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

தமிழகத்தில்சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்திய போதுஅரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரைகணினி அறிவியல் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால்ஆசிரியர்கள் யாரும் பணிக்கு அமர்த்தவில்லை. அடுத்த ஆண்டேகணினி கல்வி பாடத்திட்டம்எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது. கணினி கல்வி முடித்த பட்டதாரிகள் பலகட்டமாக,போராட்டம் நடத்தியும்அரசு கண்டுக் கொள்ளவில்லை.
மேலும், 1999ல்மேல்நிலை வகுப்புகளில்முக்கிய பாடப்பிரிவுகளில்கணினி அறிவியல் பாடம் இணைக்கப்பட்டது. இப்பாடத்தை கையாளபி.ஜி.டி.சி.ஏ.என்ற கணினி சார் சான்றிதழ் படிப்பு முடித்த, 1,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதை எதிர்த்துபி.எட்.முடித்த கணினி பட்டதாரிகள் போராடியதால்பணியில் அமர்த்திய கணினி ஆசிரியர்களுக்குபோட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 1,200 ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்துபணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு பின்கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பஎவ்வித அறிவிப்பும் இல்லை.
கடந்த 2006க்கு பின்ஆயிரத்துக்கும் மேற்பட்டதரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில்,கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை. கணினி அறிவியல் பாடத்தைகல்லுாரிகளில் முக்கிய பாடப்பிரிவாக தேர்வு செய்து படித்துபி.எட் முடித்துவேலையில்லாமல், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். 
இவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கஅரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கொண்டுவந்தபுதிய கல்வி கொள்கை அமலானால்படித்து வேலையில்லாமல் காத்திருக்கும்கணினி பட்டதாரிகளுக்குபணி வாய்ப்பு கிடைக்கும் எனகணினி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு பி.எட்.கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில செயலாளர் குமரேசன் கூறுகையில்பள்ளிகளில் அலுவலகம் சார் பணிகளுக்கு கூடபி.எட்.முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. நடப்பாண்டில்பொறியியல் மாணவர்களும்பி.எட்.,படிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
புதிய கல்விக் கொள்கை அமலானால்கூடுமானவரை கணினி ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறோம்,என்றார்

No comments:

Post a Comment