Saturday, June 14, 2014

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இளநிலை உதவியாளர் கம் கணினி இயக்குபவர் பணிக்கு ஜூன்.16 -ல் பின்வரும் தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெ.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்:தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இளநிலை உதவியாளா  கம் கணிணி இயக்குபவர் பணிக்கு தகுதிவாய்ந்த பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.  எனவே,  பின்வரும்  கல்வித்தகுதியும், வயதுவரம்பும், பதிவுமூப்பும் உள்ள பதிவுதாரர்கள் 16.6.2014  -ம் தேதி காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு  நேரில் வந்து தங்களது பதிவுமூப்பை சரிபார்த்துக்கொள்ளலாம். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் கணினியில் ஏதேனும் ஒரு சான்று பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.1.2014 -ம் தேதி அன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் 35 வயதுக்குள்ளும், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.
பதிவுமூப்பு: 22.3.2000 தேதி முடிய பதிவு செய்த அனைத்து வகுப்பை சார்ந்த ஆண், பெண் இருபாலரும், மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் 13.9.1994 வரை பதிவு செய்துள்ளவர்களும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.   

No comments:

Post a Comment