சென்னை துறைமுகத்தில், முக்கிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை துறைமுகம், 125 ஆண்டு கால பெருமை வாய்ந்தது. நஷ்டத்தில் செல்லும் இத்துறைமுகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல, துறைமுக நிர்வாகமும்,மத்திய அரசும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. கடந்த வாரம், 12 சீனியர் மற்றும் ஜூனியர் ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப, துறைமுக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, தற்போது, போக்குவரத்து கண்காணிப்பாளர், துணை விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் கன்டெய்னர் தேங்காமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் இருக்க, போக்குவரத்து கண்காணிப்பாளர் பணி முக்கியமானது. அப்பணியிடம், ஒரு சில மாதமாக காலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment